நாமக்கல், ஆக.10- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஆட்டுச்சந்தையில் சனி யன்று 15 ஆயிரம் ஆடுகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனை யானது. பக்ரீத் திருநாள் வரும் திங்களன்று (ஆக.12) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆடு தேவை அதிகமாக இருக்கும். இதற் காக ஆடுகளை வாங்க சனி யன்று நாமக்கல் - திருச் செங்கோடு சாலையில் உள்ள வாரச் சந்தைக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந் தனர். பெரம்பலூர், அரியலூர், பரமத்தி வேலூர், பேளுக்குறிச்சி, ராசிபுரம் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், வேடச்சந்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியா பாரிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். இதில் வெள்ளாடும், செம்மறி ஆடும் விற் பனைக்கு வந்திருந்தது. இங்கு 8 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 4 ஆயிரத்துக்கும், 15 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரத் துக்கும் விலை போனது. வளர்ப்பிற்காக குட்டி ஆடு ரூ.1500க்கு விற்பனை செய் யப்பட்டது. இதன் மூலம் ரூ.1.50 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது.