நாகப்பட்டினம், அக்.4- தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை, ஓய்வூதியர் நாகை வட்ட மையம் சார்பில், நாக ப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோரி க்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க வட்டத் துணைத் தலைவர் ஜி.காளிமுத்து தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் வி.மாரிமுத்து விளக்கவுரையாற்றி னார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் து.இளவரசன், நாகைத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பின் தலைவர் சு.சிவகுமார், பொதுச் செயலாளர் சு.மணி ஆகியோர் உரையாற்றினர். அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கைக ளைக் கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற 10 அம்சக் கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. வட்டச் பொருளாளர் என்.பாபுராஜ் நன்றி கூறினார்.