tamilnadu

img

கடல் சீற்றத்தால் பக்கிம்காம் கரை சேதம்

சீர்காழி, மே 23- வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு துறைமுகம் பகுதி கடலில் சீற்றம் ஏற்பட்டது. காற்று அதிகமாக வீசியதால் பழையாறு துறைமுகம் அருகே உள்ள பக்கிம்காம் கால்வாய்க்குள் கடல் நீர் வேக மாக உட்புகுந்து பக்கிம்காம் கால்வாயின் கரைகளை மோதியது. தொடர்ந்து கரையை கடல்நீர் மோதியதால் பக்கிம்காம் கால்வா யின் இடதுகரை சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு அரிப்பு ஏற்பட்டது. இதனை சீர்காழி நிலவள வங்கித்தலைவர் நற்குணன் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.