tamilnadu

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் முக்கிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தல்
நாகப்பட்டினம், செப்.25- நாகை மாவட்டம் வேதாரணியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் சிறப்பு மாநாடு, ஒன்றியச் செயலாளர் வி.முருகானந்தம் தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.வடிவேல் துவக்கவுரையாற்றினார்.  புதிய கல்விக் கொள்கை வரைவினை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்; வேதாரணியம் பேருந்து நிலை யத்தில் பயணிகள் தங்குவதற்கு நிழற்குடை அமைக்க வேண்டும்; வேதாரணியம் அரசு மருத்துவ மனைக்குப் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்; திருத் துறைப்பூண்டியிலிருந்து வேதாரணியம்- அகஸ்தியம்பளி வரை அமைக்கப்படும் அகல ரயில் பாதைப் பணி களை விரைந்து முடிக்க வேண்டும்; படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் சிறப்பு மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரை யாற்றினார்.

செப்.27 மயிலாடுதுறை டி.எஸ்.பி.அலுவலக முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு மாவட்டச் செயலாளர் நாகைமாலி அறிவிப்பு
நாகப்பட்டினம், செப்.25-மயிலாடுதுறைத் தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணுவின் பெயரை, மயி லாடுதுறைக் காவல் நிலையத்தில் உள்ள தகவல் பலகை யில் ‘ரெளடிகள்’ பட்டியலில் இணைத்துக் கேவலப்படுத் திய காவல் துறையின் இழிசெயலைக் கண்டிக்கவும், ‘ரெளடி’கள் பட்டியலிலிருந்து தோழர் துரைக்கண்ணுவின் பெயரை நீக்கிட வலியுறுத்தியும் செப்டம்பர் 27 அன்று, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமான பெ.சண்முகம் தலைமையில், மயிலாடுதுறை டி.எஸ்.பி.அலுவலகத்தின் முன்பு சிபிஎம். சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை, மயிலாடுதுறைக் காவல்துறை அதிகாரிகளோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், எஸ்.துரைராஜ், சி.வி.ஆர். ஜீவானந்தம், ஏ.வி.சிங்காரவேலன், பி.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.கணேசன், சிபிஎம் மயிலாடுதுறை வட்டச் செயலாளர் சி.மேகநாதன் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில், காவல்துறை அதிகாரிகள், துரைக்கண்ணுவின் பெயரை ‘ரெளடி’கள் பட்டியலிலிருந்து நீக்கி விடுவதாக உறுதியளித்ததன் பேரில், செப்டம்பர் 27 அன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட முற்றுகைப் போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகைமாலி அறிவித்துள்ளார்.

குடியிருப்புகளுக்கு இடையூறு திருமண மண்டபத்துக்கு சீல்
புதுக்கோட்டை, செப்.25- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்டுவந்த தனியார் திரு மண மண்டபத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி புதன் கிழமையன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெரிய கடை வீதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான கட்டிட அனுமதியின்றி தனியார் திருமண மண்டபம் செயல் பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போக்கு வரத்து மற்றும் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்க ளுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த இத்திருமண மண்ட பத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கறம்பக்குடி மகாத்மா காந்தி விழிப்புணர்வு சங்கத் தலைவர் வை.மாரிக்கண்ணு கடந்த 2015-ல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் பொதுமக்க ளுக்கு இடையூறாக உள்ள மேற்படி திருமண மண்ட பத்தை சீல் வைக்கும்படி கடந்த 31.10.2018 அன்று உத்தர விட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி கறம்பக்குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், பேரூ ராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட் மற்றும் போலீசார் முன்னிலையில் மேற்படி திருமண மண்டபத்திற்கு புதன் கிழமை சீல் வைக்கப்பட்டது.

பட்டாசுகள் விற்பனை செய்ய உரிமம் பெற்றிட கால நீட்டிப்பு
புதுக்கோட்டை, செப்.25-தீபாவளியன்று பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற்றிட இணைய வழியாக விண்ணப்பம் செய்திட கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: தீபாவளியன்று பட்டாசுகள் விற்பனை செய்திட பண்டி கைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக 31.08.2019 வரை பெறப்பட்டது. தற்போது பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலை யில், மாவட்டங்களில் இணையவழி மூலம் விண்ணப் பிக்கும் இப்புதிய நடைமுறை தங்களுக்கு மேற்கண்ட காலவரையறைக்குள் தெரிய வரவில்லை என்றும், இணை வழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வணிகர்கள், விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று இணையவழியாக விண்ணப்பம் செய்ய 28.9. 2019 வரை கால நீடிப்பு செய்யப்படுகிறது. இக்கால நீடிப் பினை வணிகர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வி.தொ.ச பேரவை
திருத்துறைப்பூண்டி, செப்.25- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நகரப் பேரவை திருத்துறைப்பூண்டி தியாகி சிவராமன் நினைவகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வி.தொ.ச நகரச் செயலாளர் எஸ்.தண்டபாணி தலைமை வகித்தார். பேரவையை துவக்கி வைத்து வி.ச மாவட்டப் பொருளாளர் எஸ்.சாமிநாதன் பேசினார்.  வி.தொ.ச மாவட்ட செயலாளர் ஆர்.குமாரராஜா சிறப்புரையாற்றினார். வி.தொ.ச நகர தலைவராக மருதாச்சலம், செயலாளராக தண்டபாணி, பொரு ளாளராக சண்முகம், துணைத் தலைவராக திராவிடமணி, செயலாளராக கல்யாணசுந்தரம், நகரக் குழுவாக முகைதீன் என்கிற முருகையன், பக்கிரி, பெருமாள், தனிக்கொடி ஆகிய 9 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.