tamilnadu

img

நேரு பிரதமராக இருந்த போது ஊராட்சி பதவி வகித்தவர் காலமானார்

சீர்காழி, மே 26-  நாகை மாவட்ட,ம் கொள்ளிடம் அருகே உள்ள கடைக்கண் விநாயக நல்லூரைச் சேர்ந்தவர் ரெங்கநா தன் (95). இவர் ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது, ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர். அப்போதைய காலக்கட்டத்தில் தொடக்கப்பள்ளி, பொது குடிநீர் கைபம்பு உள்ளிட்ட பணிகளில் ஊழலற்ற நிர்வாகம் செய்தவர். இவர் திங்களன்று காலமானார். இவரின் உடலுக்கு, மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், காங்கிரஸ் கட்சி மாநில பொ துக்குழு உறுப்பினர் படேல், ஒன்றி யக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவர் பானுசேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர்.