மயிலாடுதுறை, செப்.3- மயிலாடுதுறை மன்ன ன்பந்தல் ஏவிசி கல்லூரி யின் அறிவியல் கூட்ட மைப்பு சார்பில் சர்வதேச தனிம வரிசை அட்ட வணை ஆண்டு-2019 கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியின் செயலர் கே.கார்த்திகேயன் தலை மை வகித்தார். முதல்வர் ஆர்.நாகராஜன், கணிதத்துறை தலைவர் ஏ.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் வேதி யியல் துறை தலைவர் ஜி.வாசுதேவன், தனிம வரிசை அட்டவ ணையின் வரலாறு, சிறப்பம்சங்கள் மற்றும் அதனை உருவா க்கிய விஞ்ஞானி மெண்டலீவ் பற்றி விவரித்தார். மேலும் வேதி யியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். கல்லூரியின் அறிவியல் கூட்டமைப்பின் துணை தலைவர் கே.சிங்காரவேலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வேதி யியல் துறை பேராசிரியர் பி.அன்புசீனிவாசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். அறிவியல் கூட்டமைப்பு செயலாளர் பி.குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்த னர்.