tamilnadu

img

தரங்கம்பாடியில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு...

மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் சுனாமி பேரழிவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி மீன் ஏலக்கூடத்திலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு முக்கிய வீதிகளின் வழியாக சுனாமி நினைவிடத்திற்கு வந்து மெழுகுவர்த்திகள் ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். எம்.எல்.ஏ பவுன்ராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், முன்னாள் எம்.எல்.ஏ அருட்செல்வன், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், தரங்கம்பாடி பேரூர் செயலாளர் வெற்றிவேல், மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

;