tamilnadu

தமிழக வியாபாரிகள், விவசாயிகளை அனுமதிக்காததால் புத்தடியில் ஏலக்காய் மின்னணு ஏலம் ரத்து

தேனி, மே.31- கேரள மாநிலம் புத்தடியில் திங்க ளன்று நடைபெற இருந்த ஏலக்காய் மின்னணு ஏலம் ரத்து செய்யப்படு வதாக ஏலக்காய் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது .மத்திய அரசின் நறுமணப் பொருள் வாரியம் ( ஸ்பைசஸ் போர்டு ) சார்பில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புத்தடி ,தேனி மாவட்டம் போடி ஆகிய இடங் களில் ஏலக்காய் மின்னணு ஏலம் நடைபெறும். இதில் தமிழகம், கேர ளத்தைச் சேர்ந்த ஏல விவசாயிகள், வியாபரிகள் கலந்து கொள்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதி இரு இடங்களில் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது. பொது முடக் கத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கு  செல்ல முடியாமலும் தமிழக விவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள் கடந்த 60 நாட்களுக்கு மேலாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஏலக்காய் வியா பாரிகள், விவசாயிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று  கேரள மின்துறை   அமைச்சர் எம்.எம் .மணி தலையீட்டின் பேரில் இடுக்கி மாவட்டம் புத்தடியில் மே 28-ஆம் தேதி  ஏலம் நடைபெற்று, 16 ஆயிரம் கிலோ மட்டுமே ஏலம் போனது. அதிகபட்சமாக கிலோ விற்கு ரூ. 2,410  ஏலம் போனது .சரா சரியாக கிலோவிற்கு  ரூ.1,769   ஏலம் போனது. பொது முடக்கத்திற்கு முன் அதிகபட்சமாக ரூ 3198-க்கும், சாராசரியாக ரூ .2359-க்கும் ஏலம் போனது.  ஏலம் ரத்து .ஸ்பைஸ் வாரியம் அட்டவணைப்படி சனிக்கிழமை சி.ஜி.எப்.பி.எல் நிறுவனம் ஏலம் நடத்த அனுமதி வழங்கியது .அந்த நிறுவன ஊழியர்களுக்கு புத்தடி செல்ல தேனி மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. மேலும் விவசாயிகளும் அங்கு சென்று ஏலக்காயை ஏல நிறுவனத்தில் பதிவு செய்ய முடியவில்லை .தமி ழக வியாபாரிகளை அனுமதிக்காத நிலையில் ஏலம் ரத்து செய்யப்பட் டது.

இரண்டாவது நாளாக ரத்து 
புத்தடி ஸ்பைசஸ் வாரியத்தில் ஜூன் 1- ஆம் தேதி இடுக்கி மாவட்டம் வண்டமேடு பகுதியை சேர்ந்த கிரீன் கோல்டு நிறுவனம் ஏலம் விடு வதற்கு அனுமதி பெற்றது .எனினும் தங்களது ஏல நிறுவனத்தின் ஊழி யர்கள், வியாபரிகள்,விவசாயிகள் பெரும்பகுதி தமிழகத்தில் இருப்ப தால் ஏலம் நடத்த சாத்தியமில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  எனவே புத்தடியில் நடை பெறும் ஏலக்காய் மின்னணு வர்த்த கத்தில் கலந்து கொள்ள தமிழக வியா பாரிகள், விவசாயிகளை தேனி ஆட்சியர் முறைப்படி அனுப்ப நட வடிக்கை எடுக்க வேண்டும், அல்லது போடியில் ஏலம் நடத்த ஏற்பாடு  செய்ய வேண்டும். ஏலக்காய் விவ சாயிகள், வியாபாரிகள், தோட்டத் தொழிலாளர்கள், ஏலக்காய் தரம் பிரிப்போர், சுமைப்பணி தொழிலா ளர்கள், வாடகை வாகன ஓட்டுநர் ஆகியோரது வாழ்க்கை இந்த வர்த்தகத்தில் அமைந்துள்ளது.  எனவே இதை வேடிக்கை பார்க்காமல் போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலாவது துணை முதல்வர் நேரில் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.