tamilnadu

img

கொரோனா காலத்தில் சேவையாற்றிய செவிலியர்கள் திடீர் பணி நீக்கம்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை....

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா காலத்தில் மருத்துவ சேவையாற்றிய செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக கொரோனா தடுப்புதன்னார்வ செவிலியர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: பெருந்தொற்று சூழலில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், நோய் தொற்றால்பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை இயக்குனர் மூலமாக செவிலியர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் இணைஇயக்குநர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தற்காலிக தொகுப்பூதிய செவிலியர்களாக பணிபுரிந்து வந்தோம். 
தற்போது எங்களை எந்தவித முன் அறிப்பும் இன்றி அனைவரையும் அக்டோபர் 31.10.2020 அன்று முதல் எங்களைபணிக்கு வர வேண்டாம் என்றும், பணியில் இருந்து விலகி கொள்ளுமாறும் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வாய்வழி உத்தரவு மூலம் அறிவுறுத்தி உள்ளனர்.நாங்கள் இந்த கொரோனா பெருந் தொற்று சூழலில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்கும்நோக்கத்துடன் இந்த வேலையில் பணிபுரிந்து வருகிறோம். மேலும் ஒரு வாரம்கொரோனா பணி ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் காலம் மீண்டும் கொரோனாபணி என தொடர்ந்து, அதுமட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளாகவே பணிபுரிந்து வந்துள்ளோம். இந்த கால கட்டங்களில் எங்கள் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நேரம் செலவிட முடியாமல் இருந்த போதிலும் நாங்கள்எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முழு அர்ப்பணிப்போடு எங்கள் பணியை செய்து வந்துள்ளோம்.

மேலும் எங்களுள் சில செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருப்பினும் எங்களுக்கு பணி ஊதியம் சரியாக கிடைக்காத நிலையிலும் அதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் பணியினை சிறப்பாக செய்து வந்துள்ளோம்.இந்த சூழலில் எங்களை பணியில் இருந்து திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்குவது எங்களுக்குமிகுந்த மன வேதனை அளிக்கிறது.அது மட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு பணி செவிலியர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். 

மேலும் இந்த பணிக்காக செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பணிக்கு வராத சூழலில் நாங்கள் ஏற்கனவே பார்த்து வந்த பணியையும் விட்டுவிட்டு இந்த பணிக்கு வந்ததால் நாங்கள்ஏற்கனவே பார்த்த வேலையும் இல்லாமல் தற்போது இந்த வேலையும் பறிபோய் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் சூழல் நிலவுகிறது. எனவேஎங்களை பணியில் இருந்து நீக்காமல் எங்களை தொடர்ந்து பணிபுரிய அனுமதித்து எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி எங்களது வாழ்வாதா
ரத்தை பாதுகாத்திட ஆணை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.