tamilnadu

பொய்யான தகவல் அளித்து இ - பாஸ் பெற்றவர் வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி, ஜூன் 18- தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொய் யான தகவல்களை பயன்படுத்தி இ - பாஸ் பெறுபவர்கள் மீதும், உரிய அனுமதி பெறா மல் வருபவர்கள் மீதும் வழக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித் துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்ட எல்கைப் பகுதி யில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைக் கப்பட்டு வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரு கிறது. மேலும் சோதனை சாவடியில் இ- பாஸில் உள்ள கியுஆர் கோடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு முறையாக அனுமதி பெற் றுள்ளாரா எனவும் கண்காணிக்கப்பட்டு வரு கிறது. தூத்துக்குடி மாவட்டம் பாண்டவர்மங் கலம் கிராமம், ராஜீவ்நகர் இ.பி. காலனி பகுதியை சேர்ந்த அமல்ராஜ் ( 49) என்பவர் ஆசிரியராக கயத்தாறு வட்டத்தில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் பணியாற்றி வரு கிறார்.

இவர் தனக்கு சொந்தமான வாகனத் தில் மருத்துவ காரணங்களுக்காக சென்னை செல்ல அருள் வசந்தி பெயரில் இ - பாஸ் பெற்று,  எட்டயபுரம் வட்டம் மஞ்சநாயக்கன் பட்டி கிராமத்திலிருந்து 3 நபர்களை கடந்த 5 ஆம்தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகருக்கு அழைத்துச் சென் றுள்ளார். மேலும் அமல்ராஜ், அமுதா செல்வி என்பவரின் பெயரில் சென்னை அசோக் நகர் ஆவடி முகவரியிட்டு, மருத்துவக் கார ணங்களுக்காக இ- பாஸ் பெற்று இரு வரை 7 ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் தெற்கு மயிலோடை கிரா மத்திற்கு அழைத்து வந்துள்ளார். இவர் தவறான ஆவணங்களை பயன் படுத்தி இ- பாஸ் பெற்றுள்ளார் என்பது கண்ட றியப்பட்டுள்ளது. இது போன்று தவறான தகவல் தெரிவித்து இ - பாஸ் விண்ணப்பம் செய்து அடிக்கடி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வருவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படை யிலும், ஊரடங்கு காலத்தில் நோய் தொற் றினை பரப்பும் விதமாக சென்னை சென்று வந்து தன்னை தனிமைப்படுத்திட நட வடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அலு வலர் மூலம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை செய்து நட வடிக்கை எடுத்திட புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அமல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் பயன்படுத்திய வாகனம் கைப்பற் றப்பட்டு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டு தற்போது கோவில்பட்டி பகுதியில் அமைக்கப்பட் டுள்ள தனிமைப்படுத்தப்படும் மையத்தில் காவல் பாதுகாப்புடன் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற பொய்யான தகவல்களை பயன்படுத்தி இ- பாஸ் பெற்று தூத்துக்குடி மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்துக்கு சென்று வரு பவர் மீது தொற்று நோய் பரவல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொய்யான தகவல் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி இ- பாஸ் பெற்றுள்ளது கண்ட றியப்பட்டால் அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.