தூத்துக்குடி, ஜன.4- தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநரான ரவிக்குமார் முன்னிலையில் நடை பெற்ற இந்த ஒத்திகையில், அமோனியா பிரிவில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டால் அதை எவ்வாறு தடுப்பது என செய்து பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஒத்தி கையை அவசர கால கட்டுப்பாட்டு அறையி லிருந்தபடி ஸ்பிக் நிறுவன தொழிற்சாலைப் பொது மேலாளர் செந்தில்நாயகம் பார்வை யிட்டு, வாயுக் கசிவைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில், உதவிப் பொதுமேலாளர் ராஜேஷ்குமார், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை மேலாளர் ரவிச்சந்திரன், ஸ்பிக் நிறுவன தீய ணைப்புத் துறையினர் பங்கேற்றனர். இதேபோல, தூத்துக்குடி துறைமு கம் அருகேயுள்ள கிரீன்ஸ்டார் அமோ னியா சேமிப்புக் கலன் தொழிற்சாலை யிலும் அவசரகால ஆயத்த ஒத்திகை, தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரவிக்குமார் முன்னிலையில் நடை பெற்றது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் மாசு சரிபார்க்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இதில், ஸ்பிக் மற்றும் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழக பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் பங்கேற்றனர்.