திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்வடக்கு வாசலுக்கு அருகில் உள்ள கழிப்பிடம் குண்டு குழியாக உள்ளது. திரெளபதிஅம்மன் கோவில் சாலையில் உள்ள கழிப்பிடமும் போதிய தண்ணீர் வசதி, பராமரிப்பின்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகபயன்பாடற்று உள்ளது. மேற்கண்ட இரண்டு கழிப்பறைகளும் ஆண் - பெண்இருபாலரும் பயண்படுத்தும் கழிப்பறைகளாகும். சிறுகடை வியாபாரிகள் மற்றும்ஊழியர்களுக்கு இவை பயணுள்ளதாகஇருந்தது. இந்த இரு கழிப்பறைகளையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.