திருவாரூர்: திருவாரூரில், அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டத்தின் சார்பாக உலக மகளிர் தினவிழா, மார்க்ஸ் நினைவு நாள், அன்னை சாவித்திரி பாய்பூலே விருது வழங்கும் விழா முப்பெரும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் பாரத் கல்விக் குழுமம் செயலாளர் புனிதா கணேசன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பல்வேறு துறைகளில் 10 பெண் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து அன்னை சாவித்திரி பாய்பூலே விருது வழங்கப்பட்டது. ஐ.வி.நாகராஜன் (சிபிஎம்), பி.எஸ்.மாசிலாமணி (சிபிஐ), அருண்காந்தி, பேரா. நாகேந்திரன், மு.பிருதிவிராஜன் (தனி வட்டாட்சியர்), ரெ.காலைக்கிதிர வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். படிப்பு வட்டத்தின் தலைவர் லூர்துசாமி நிகழ்ச்சி ஏற்பாடு களை செய்திருந்தார். பெண்களால் மட்டுமே நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு, மேடையும் பெண்கள் மட்டுமே வீற்றிருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.