tamilnadu

img

நெல்லும் காய்ந்து... விவசாயியும் காய்ந்து... கண்டுகொள்ளவில்லையே அரசு!

திருவாரூர், அக்.22- திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் தற்போது விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வரு கின்றனர். ஈரப்பதத்தை காரணம் காட்டி  கொள்முதல் நிலையங்கள் வாங்க மறுப்பதால் நெல்லை காய வைத்துக் கொண்டு விவசாயிகளும் கொள்முதல் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். எனவே அரசு 20 சதவீதம் வரை ஈரப் பதத்தை அனுமதித்து நெல் கொள் முதல் செய்ய கொள்முதல் நிலை யங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி வேண்டுகோள் விடுத் துள்ளார்.  திருவாரூரில் செவ்வாய்க்கிழமை யன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட் டத்தில் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய முன்னோடிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்ட னர்.  இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தமூர்த்தி பேசும் போது, தற்போது விவசாயம் செய்து நெல் அறுவடை செய்த விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்காக செல்லும் போது 17 சதவீதம் மட்டுமே ஈரப்பதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கொள்முதல் அலுவலர்கள் கூறி நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கி றார்கள். எனவே தற்போதைய பருவ மழையை கணக்கில் கொண்டு 20 சத வீதம் வரை ஈரப்பதத்தை அனுமதித்திட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும்.  நன்னிலம் வட்டம் தழையூர் கிரா மத்தில் நெல் கொள்முதல் நிலையம் கோரி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்தாண்டு அவ்வூரில் நெல் கொள்முதல் நிலை யம் திறக்க வேண்டும். இதே வட்டத்தி லுள்ள பனங்காட்டாங்குடியில் பாசன வாய்க்கால்கள் முற்றிலும் அழிக்கப் பட்டு விட்டதால் 48 வேலி சாகுபடி நிலங்கள் மழையை மட்டுமே நம்பி யுள்ளது. இந்த பருவ மழைக்கு ஏற்றார் போலவே விவசாயிகள் சாகுபடி செய்யும் நெருக்கடிக்கு தள்ளப்படு கிறார்கள். எனவே அவ்வூரில் விவசாயி களின் நலம் கருதி பாசன வாய்க்கால் களை மீட்டுத் தர வேண்டும்.  வேலங்குடி ஊராட்சி கமுகக்குடி யில் அரசின் சார்பில் புதிதாக “சமத்துவ சுடுகாடு” கட்டித் தரப்பட்டுள்ளது. இங்கு செல்வதற்கான சாலை வசதி சரி இல்லாததாலும் வாய்க்காலை கடந்து செல்ல பாலம் இல்லாததா லும் இப்பகுதியில் இறந்து போகின்ற வர்களின் உடல்களை ஆற்று நீரில் கடந்து சுமத்து சென்று சுடுகாட்டில் இறுதி சடங்குகளை செய்ய வேண்டி யுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாலம் மற்றும் சாலை வசதி களை செய்து தர வேண்டும்.  கட்டளைத் தெருவில் சதீஷ் என்ற பயனாளிக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி நிறை வடைந்த நிலையிலும் அதற்கான தொகை வழங்கப்படவில்லை என்று அந்த பயனாளி கூறுகிறார். எனவே அதை கவனத்தில் கொண்டு அவர் செலவு செய்த தொகையை திட்டத்தின் கீழ் விடுவித்திட வேண்டும். கீழத்தெரு வில் வசிக்கும் 40 பட்டியல் இனக் குடும் பங்களுக்கு குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  திருமச்சூர் தென்பாதி வாய்க் காலை செப்பனிட்டு தர வேண்டும். இப்பகுதியில் பல மாதங்களாக நிலு வலையில் உள்ள 100 நாள் வேலை சம்பள பாக்கியை தற்போது பண்டிகை காலம் என்பதால் நிலுவைத் தொகை யை முழுவதுமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் விரைவான நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் 19, 20, 21 சதவீதம் வரை ஈரப்பதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என்று கூறியதுடன் முன் வைக்கப்பட்டுள்ள ஏனைய கோரிக்கை கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.