திருவாரூர், அக்.25- திருவாரூரில் முன்னோடி வங்கிகள் சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் 3094 நபர்களுக்கு ரூ.42 கோடி யே 96 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் வழங்கினார். இம்முகாமில் 17 முன்னோடி வங்கிகள் கலந்து கொண்டு வங்கி சார்ந்த கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளதை பார்வை யிட்டார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல பொது மேலாளர் பி.ஏ.ஆர்.பேட்ரோ, முதன்மை மண்டல மேலாளர் கே.எஸ்.லட்சுமி நரசிம்மன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா மற்றும் வங்கி அதிகாரி கள் கலந்து கொண்டனர்.