tamilnadu

img

நிவாரணம் வழங்கல்

 திருத்துறைப்பூண்டி, ஆக.1-  திருத்துறைப்பூண்டி நகரம் வெட்டுக்குளத்தெரு சுகந்தி என்பவரது வீடு சம்பவத்தன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியது. இதில் வீட்டில் உள்ள 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.  இந்நிலையில் அவர்களது வீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களது வீட்டிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், உஸ்.சாமிநாதன், நகரக்குழு கு.வேதரெத்தினம், கே.கோபு, எஸ்.தண்டபாணி, எம்.ஜெயபிரகாஷ், ஏ.கே.செல்வம், கிளை செயலாளர் குமார், இந்திய மாணவர் சங்க மாநில துணை தலைவர் ஏ.பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.