குடவாசல், மே 10- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள செம்பியமிழலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மறைந்த தோழர் கே.ரத்தினசாமி படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். புகழஞ்சலி நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மறைந்த தோழர் கே.ரத்தினசாமி உருவப் படத்தை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தி புகழ்வுரையாற்றினார். சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.எம்.லிங்கம், திருக்கண்டீஸ்வரம் ஊராட்சி தலைவர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.