tamilnadu

திருவள்ளூர், சென்னை, தூத்துக்குடி முக்கிய செய்திகள்

ஏரியை தூர்வாரும் பணியில் காவல்துறை
திருவள்ளூர், அக்.8-   மழை நீர் வீணாகா மல் இருக்க ஏரி, குளங்க ளில் நிரப்பி அதை விவசாயம் மற்றும் பொது பயன்பாட்டி ற்கு உபயோகப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கப்பட்டு வரு கிறது.   இதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.   இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில்,  காந்திப்பேட்டை பகுதியில் தேவர்கடியார் தாங்கல் குளத்தை தமிழக அரசின் மும்மாரி திட்டத்தின் கீழ் தூர்வாரி கரைகளை பலப்படுத்துவதற்காக  திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் ரூ.8.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து அக்டோபர் 7 ஆம் தேதி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் முன்னிலையில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் குளத்தை தூர்வாரும் பணியை துவக்கிவைத்தார். 13 ஆயிரத்து 110 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள குளத்தை 5 நாட்களில் தூர் வாரி முடிப்பது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திரு வள்ளூர் மாவட்டத்தில் மேலும் 2 இடங்களில் மும்மாரி திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் திட்ட மிட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. இங்கு தொடங்கப்ப ட்டுள்ள திட்டத்தை காவல் துறை அதிகாரிகள் அருகில் இருந்து கண்காணிக்க வும், மரங்கள் நட்டு வளர்க்கவும் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குளத்தை தத்தெடுத்து பராமரிக்கப் போவதாகவும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார். 

ரிகா பல்கலைக்கழக தகவல் மையம்  சென்னையில் தொடக்கம்
சென்னை, அக். 8 முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான  லாட்வியா நாட்டில் இயங்கி வரும் ரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் கல்வி மையம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் லாட்வி யன் நாட்டு அரசால் நடத்தப்படுகிறது.  சென்னை, தி.நகரில் இந்த மையம் – இந்திய மாண வர்கள், ரிகா பல்கலைக்கழ கத்தில் கல்வி கற்கத் தேவை யான அனைத்து ஆலோச னைகளையும் வழங்குவது டன், இந்தப் பல்கலைக்கழ கத்துடன் இணைந்து செய லாற்ற விரும்பும் மற்ற நிறுவனங்களுக்கும் உதவ வழிவகை செய்யப்பட்டு ள்ளது. ரிகா பல்கலைக்கழ கத்தில் நடைமுறையில் உள்ள இரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிர்வாக ஆலோசனைப் பணிகளையும் இந்த மையம் செய்ய உள்ளது. இதில் அந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் குறுகிய காலப் படிப்புகளுக்கான பாடத்தி ட்டங்களும் அடங்கும். இந்த நிகழ்ச்சியில், ரிகா தொழில்நுட்பப் பல்கலை க்கழகத்தில், சர்வதேச கூட்டுறவு மற்றும் ஆய்வு தொடர்பான துறையின் தலை வரும், பேராசிரியருமான  இகோர்ஸ் திபன்ஸ்  மற்றும் அத்துறையின் துணை இயக்குனர் ஸேன் புரியயூரா உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, இந்திய மாணவர்களுக்கு உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை வழங்கினர்.

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடி  ஆட்சியர் வலியுறுத்தல்
தூத்துக்குடி, அக்.8- மாணவர்கள் தண்ணீரை சேமிக்கவும் துணிப்பைகளைப் பயன்படுத்தவும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.  தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சமூகமேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டு தோறும் ஐந்து கிராமங்களைத் தத்தெடுத்து அங்குள்ள மகளிர் மற்றும் மாணவர்களுக்கு மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் பழையகாயல் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சூழல் மேம்பாட்டு முகாம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெற்றது. இந்நிகழ்ச்ச்சியில் தூய மரியன்னை கல்லூரிபேராசிரியை அமோரா வரவேற்றார். தூய மரியன்னை கல்லூரி குழந்தை தெரஸ், உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் திட்டங்கள் பற்றிய அறிமுகம் செய்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிதலைமை வகித்து பேசியதாவது:தண்ணீர் சேமிப்பும் பாரம்பரிய தண்ணீர் வளங்களான குளங்களை தூர்வாரும் நிகழ்வுகளும் இன்றைய இன்றியமையாத தேவைகளாகும். சுற்று சூழலை பாதுகாக்க நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அனைவரும்மாற்று துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு ஆட்சியர்துணிப்பைகளை வழங்கினார்.