tamilnadu

img

விவசாய கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் மனு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே விவசாய கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்த இடைத்தரகர்கள், வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். உடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் வி.சுப்பிரமணி இருந்தார்.