tamilnadu

img

போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, மே 11- அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் திருவண்ணாமலை மண்டல நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பேரவை செயலாளர் க.சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு பொதுச் செயலாளர் ஏ.சேகர், கே.நாகராஜன், எஸ்.லட்சுமி நாராயணன், எஸ்.பாலசுந்தரம், ஆர். கருணாமூர்த்தி, ஏஐடியுசி வி.குப்புரங்கன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆர்.சி, ஆர்.டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 550 கிலோ மீட்டரில் இருந்து 600 கிலோ மீட்டராக மாற்றம் செய்து, பேருந்துகளை இயக்க கூடாது, தொழிலாளர் ஆணையர் முன்பாக ஏற்றுக் கொண்டபடி, பணி நிலைகளை மாற்றக் கூடாது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தொமுச எஸ்.பாஸ்கரன் நன்றி கூறினார்.