நூலகத்தில் கவிதை படைப்போம் நிகழ்வு ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு
உடுமலை, ஜூன் 29- உடுமலை முழுநேர கிளை நூலகம் இரண்டில் ‘கவிதை படைப்போம்’ எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என நூலக வாசகர் வட்ட தலைவர் அறிவித்துள்ளார். இதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த தலைப்பில் கவிதைகள் எழுதலாம். இக்கவிதைகள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதனை ஜூலை 3ந் தேதிக்குள் உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் பங்கேற் கும் அனைவருக்கும் சான் றிதழ்கள் வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைவரின் கவிதைகளும் தொகுக்கப்பட்டு உடுமலை புத்தக திருவிழாவில் புத்தக மாக வெளியிடப்படும். எனவே கவிதை எழுவதில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளோடு கலந்து கொள்ளலாம் என நூலக வாசகர் வட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் குறைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி
திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாநகரில் குடிநீர் தொடர்பான குறை களை உடனுக்குடன் தெரி விக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2430 என்பதைப் பொது மக்கள் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.