tamilnadu

img

தமிழர்களின் பண்பாட்டை அழிக்கும் தேசிய புதிய கல்விக் கொள்கை தபெதிக பிரச்சார இயக்கம்

உடுமலை, ஆக. 29-  தமிழர்களின் பண்பாட்டை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கையை விளக்கி உடுமலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையம்  மற்றும் மடத்துகுளம் கணியூர் பேருந்து நிலையம் எதிரில் வியாழனன்று நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்திற்கு அவ்வமைப்பின் உடுமலை நகர செயலாளர் ஜே.கே. ரகேஷ், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் கு. மயில்சாமி ஆகியோர் தலைமை தாங்கி னார். பொதுப் பள்ளிக்களுக்கான மாநில மேடையின் பொது  செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தந்தை பெரியார் திரா விடர் கழகத்தின் பொது செயலாளர் கு. ராமகிருட்டிணன், மாநில வெளிட்டுச் செயலாளர் இரா. மனோகரன், நிர்வாகிகள் கா. கருமலையப்பன், சு. சிவசங்கர், யாழ் நடராசன், கோ. விசுவநாதன் ஆகியோர்  மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கையின் அபாயங்களை விளக்கிப் பேசினர். இந்நிகழ்வில் திராளனோர் கலந்து கொண்டனர்.