பெரம்பலூர், மே 27-பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே நாணமங்கலம் கோயில் விழாவையொட்டி தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சிக்கு ஒரு தரப்பினர் பங்கேற்க விழாக்குழுவினர் அழைக்கவில்லையாம். இதையடுத்து அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், சமரசக் கூட்டம் நடத்தி அனைத்துச் சமூகத்தினரையும் பங்கேற்கச் செய்து விழாவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என பெரம்பலூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு பிரிவினருக்கான சமரசக் கூட்டம் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்படாததால்ஒரு தரப்பினர், நாரணமங்கலம் தேரடி வீதியில் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாடாலூர் காவலர்கள் மற்றும்வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.