பாபநாசம், அக்.2 - காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் “ஆளில்லா கடை” திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மக்களிடையே நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 25 ஆவது ஆண்டாக இந்த ஆளில்லா கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் பழைய பேருந்து நிலைய நிழற்குடை கடையாக மாற்றப்பட்டு, நடந்த நிகழ்ச்சிக்கு பாப நாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் ரோட்டரி பப்ளிக் இமேஜ் கோ ஆர்டினேட்டர் ரமேஷ் பாபு, ஆளில்லா கடையை திறந்து வைத்துப் பேசினார். பாப நாசம் துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேலு வாழ்த்தினார். ஒரு நாள் மட்டும் செயல்படும் இந்த ஆளில்லா கடையில், பிஸ்கட், சோப், பேஸ்ட், ஊது பத்தி, வாட்டர் பாட்டில், சோப் டப்பா, குப்பை கூடை, ஊறுகாய் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருளை எடுத்துக் கொண்டு, அதில் உள்ள விலையைப் பார்த்து, அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டி யில் பணத்தை போட்டு விட வேண்டும். மீதிப் பணத்தையும் தாங்களே எடுத்துக் கொள்ளலாம். இதில் வரும் தொகை ரோட்டரி சேவைக்கு பயன்படுத்தப் படுகிறது. இதில் பாபநாசம் ரோட்டரி கிளப் செயலர் ரவிச்சந்திரன், முன் னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.