விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
முசிறி ஜூலை 6- திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அம்மன்குடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறு தானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு தொட்டியம் வட்டாரம் வேளாண் உதவி இயக்குனர் சுரேஸ்குமார் தலைமையேற்றார். தொட்டியம் வட்டார உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொருளாளர் தீனதயாளன், துணை வேளாண் அலுவலர் முத்துகிருஷ்ணன் பேசினர். முன்னதாக சுகுந்தா வட்டார தொழில்நட்ப மேலாளர்(அட்மா) வரவேற்றார். இதன் ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் யுவராஜ், சரண்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கோவில் தேரோட்ட விழா
அறந்தாங்கி, ஜூலை 6- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் திருக்கைலாய பரம்பரைக்கு சொந்தமான திருவாவடுதுறை ஆதினம் சிவயோகநாயகி உடனாய ஆத்மநாதசுவாமி கோவில் மாணிக்கவாசகர் ஆணி திருமஞ்சன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 28ந் தேதி துவங்கிய விழா 9ம் நாள் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது மாணிக்கவாசகர் தேர் திருப்பணிக்குமு ஈரோடு மற்றும் ஏகாம்பரம் சேர்வை வீரப்பன் சேர்வை குடும்பத்தார்கள் திருவாவடுதுறை ஆதீனம் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தின சபாபதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம் மண்டகபடிதாரர்கள் ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டனர்.
விபத்தில் ஒருவர் பலி
முசிறி ஜூலை 6- திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே தேவானூர் காலனியை சேர்ந்த தியாகராஜன் மகன் சரவணன்(30), விராலிமலை பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சரவணன், பைக்கில் தா.பேட்டை நோக்கி வந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து தா.பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து கார் டிரைவர் விக்னேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்
அறந்தாங்கி, ஜூலை 6- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் சிலட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தலைமையாசிரியர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. சிலட்டூர் நாட்டு தலைவர் தங்கவேல், தமிழ்மாறன் பள்ளி துணைஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராசு பேசினார். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 36 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரு பிரிவுகளாக, கபடி, கோகோ, வாலிபால், பேஸ்கட் பால், புட்பால் மற்றும் தடகள போட்டிகள் என 13 நாட்கள் நடைபெறும் போட்களில் முதல் நாள் கபாடி போட்டியை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம் துவக்கி வைத்தார் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிழ் பரிசு வழங்கப்பட உள்ளது. நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.