tamilnadu

img

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

மண்ணச்சநல்லூர், ஜூலை 12- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை அதிகாரி எபிநேசர் இமானுவேல் வரவேற்றார். என்சிசி மாணவர் படையின் தமிழ்நாடு இரண்டாவது கவசப் படை அதிகாரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் பாஸ்கரன், இரமணி ஆகியோர் காற்று, நீர், நிலம், ஆகாயம் மாசுபடுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினர்.