நாகப்பட்டினம், அக்.30- நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான அக்கரைக்குளம் தென்கிழக்குப் படித்துறை அருகே ஒரு சாதாரண மரக்கம்பத் தில் மின் கம்பிகள் பொருத்தப்பட்டு, மின்சா ரம் பயணிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வீசிய கஜா புயலில் இங்குள்ள உலோகத்தாலான மின்கம்பம் சாய்ந்து விழுந்த பிறகு, உடனடி அவசரத் தேவை யாக, மின் கம்பம் பற்றாக் குறையால் இந்த மரக் கம்பம் பொருத்தப்பட்டது. ஆனால், 11 மாதங்களைக் கடந்தும், இன்னும் மின்சாரத் துறை, நிலையான உலோக மின்கம்பத்தைப் பொருத்தாமல் மிக அலட்சியப் போக்கில் மின்சாரத் துறை நிர்வாகம் நடந்து வருகிறது. இந்நிலை நீடித்தால், வடகிழக்குப் பருவமழைக் கால மான தற்போது, பெருமழையிலோ, பலத்த காற்றிலோ அல்லது மாடுகள் இந்த மரக் கம்பத்தில் மோதி உரசினாலோ இந்த மரக் கம்பம் கீழே சாய்ந்து மக்கள் உயிருக்கு அபாயத்தை விளைவிக்கக் கூடும். இப்படிப்பட்ட விபத்துகள் நேர்வதற்கு முன், மின்துறை நிர்வாகமும் மாவட்ட நிர்வா கமும் இந்த மரக் கம்பத்தை அகற்றி உலோக மின் கம்பத்தைப் பொருத்த வேண்டும் என்று அப்பகுதிப் பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழுவினரும் கேட்டுக் கொள்கின்றனர். விரைவில் இந்த மரக் கம்பம் மாற்றப் படாவிடில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் போராட்டங்கள் நடை பெறும் என நாகை நகரப் பொறுப்புச் செயலா ளர் சு.மணி தெரிவித்துள்ளார்.