திருச்சிராப்பள்ளி, செப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்ற பகுதிப் பேரவை நடைபெற்றது. பேரவைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராமர், வழக்கறிஞர் ரங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிழக்கு சட்டமன்ற பகுதிக்குழு மலைக்கோட்டை, பாலக்கரை என இரண்டு பகுதிக் குழுக்களாக பிரிக்கப்பட்டது. இதில் மலைக்கோட்டை பகுதி செயலாளராக ஜி.இளையராஜா, பாலக்கரை பகுதி செயலாளராக ஆர்.சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.