தருமபுரி, ஆக.8- தருமபுரியில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் வகையில் காவல் துறையினர் நீதிமன்றத் திற்கு சுற்றுலாவாக அழைத்து சென்று நூதன பிரச்சாரம் மேற்கொண் டனர். தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தலைகவசம் அணி வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச் சாரம் நடைபெற்றது. இதில் இருசக்கர வாக னத்தில் தலைகவசம் அணியாமல் வந்த வர்களை நான்கு சாலை சந்திப்பு அருகில் அமர்த்தி தலைகவசம் அணிவது மற்றும் அதன் அவசியத்தைப் பற்றி தருமபுரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ராஜன் பேசினார். மேலும் தலைகவசம் அணி யாமல் வந்தவர்களை இன்பச்சுற்றுலாவாக தருமபுரி நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து சென்று சுற்றி காண்பிக்கப்பட்டது. மேலும் தருமபுரி நகரில் உள்ள 300 ஆட்டோக்களில் தலைகவச விழிப்புணர்வு குறித்து டிஜிட்டல் பேனர்கள் ஒட்டப் பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி உட்கோட்ட காவல்துணைகண்காணிப் பாளர் ராஜ்குமார், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டணர்.