தருமபுரி, அக்.7- தருமபுரியில் அரசு வழங் கிய இலவச பஸ்பாசை பேருந்து நடத்துநர் ஏற்க மறுத்ததால் ஐடிஐ மாண வர்கள் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கும் அவ லநிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். தருமபுரி அரசு தொழிற்ப யிற்சி நிலையத்தில் படித்து வரும் ஐடிஐ மாணவர்களில் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்தொடங்கியது. இத னைத்தொடர்ந்து, மாணவர்கள் அரசு வழங்கிய இலவச பஸ்பாஸ் மூலம் அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்தனர்.
அப் பொழுது நடத்துநர் இலவச பஸ்பாஸை ஏற்கமுடியாது எனக்கூறி, மாணவர்கள் அனைவரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள் ளனர்். அதேநேரம், ஏராளமான மாண வர்கள் பணம் இல்லாமல் இருந்த நிலை யில், பேருந்தில் பயணம் செய்த பொதுமக் களிடம், பணம் பெற்று டிக்கெட் வாங்கி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆகவே, இலவச பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.