தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.