tamilnadu

img

திருமாவளவனை போட்டு தள்ளுவோம் என மிரட்டல் விடுத்த ஸ்ரீதர் மீது காவல்துறை வழக்குப்பதிவு 

திருமாவளவனை போட்டு தள்ளுவோம் என பொது மேடையில் மிரட்டல் விடுத்த ஸ்ரீதர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் சென்னையில் உள்ள நங்கநல்லூறில் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க கூட்டம் நடைபெறுள்ளது. இதில், திருமாவளவனை போட்டுட்டுத்தான் ஒதுங்குவோமே தவிர, பார்த்துட்டு ஒதுங்க மாட்டோம் என மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

மேலும், திருமாவளவனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு, நீ எந்த சாதியா இருந்தால் என்ன, நீ இந்துவே இல்லை. கிறிஸ்ட்ன்னு பேட்டி தர்ற. எந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் நின்று நீ ஜெயிக்க முடியும், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வா பாக்கலாம் என மிரட்டியுள்ளார். மேலும், திருமாவளவன் குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார்.

ஸ்ரீதரின் பேச்சு சமூக வலைதளங்களில் அதிகமாக கண்டனங்களுடன் பகிரப்பட்டது. திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஸ்ரீதர் மாவோ, ஏங்கல்ஸ், லெனின் போன்ற கம்யூனிச தலைவர்களையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

 இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பிரபு பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஸ்ரீதர் மீது கொலை  மிரட்டல், அவமதித்தல்,ஆபாசமாகப் பேசுதல், கலக்கம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.