tamilnadu

img

தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வாய்ப்பு மிக குறைவு - தமிழக வேளாண்துறை

தமிழகத்திற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வாய்ப்புகள் மிக குறைவு என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என ஐநா அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதற்கேற்ப பாகிஸ்தானில் இருந்து அரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்தன.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு உள்ள உணவு பயிர்களை, பாலைவன வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பயிர்களையும், வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வாய்ப்புகள் மிக குறைவு என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஒரு வேலை வெட்டுக்கிளிகள் படையெடுத்தால், அவற்றை கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.