தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற விரிந்து பரந்த மேடை உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த மேடையில் தொழிற்சங்க அமைப்புகள், விவசாய, விவசாயத் தொழிலாளர்கள் சங்க அமைப்புகள், இதர வெகுஜன அமைப்புகள், தலித் அமைப்புகள், சில அறிவு ஜீவிகள் இணைந்து செயல்படுகின்றனர். இந்த 12 ஆண்டுக ளில் இம்மேடை எடுத்துக் கொண்ட முயற்சிகள், நடத்திய போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், இவை ஏற்படுத்திய வெற்றிகள் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள் ளன. இதனால் தலித் மக்கள், தலித் அமைப்புகளிடம் மட்டு மல்ல, தலித் அல்லாத மக்கள், ஜனநாயக இயக்கங்கள் மற்றும் முற்போக்கு சக்திகள், தனி நபர்களிடம் இந்த மேடை யின் மீதான மரியாதையும், செல்வாக்கும் உயர்ந்துள்ளன.
உத்தப்புரம் சுவர் இடிப்பு
உத்தப்புரம் சுவர் இடிப்பு இந்த மேடையின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இந்த வெற்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் பரவலான பகுதிகளில் அதிர்வ லைகளை ஏற்படுத்தியது. இச்சுவர் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து “தீண்டாமைச் சுவர்” என்ற வடிவம் பரவலாக முன்னுக்கு வந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வேறுபல தீண்டாமைச் சுவர்களும் அடையாளம் காணப் பட்டு அவையும் இடித்துத் தள்ளப்பட்டன.
அருந்ததியர் உள்ஒதுக்கீடு
அடுத்து தலித்துகளிலும் தலித்துகளாக உள்ள அருந்த தியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. இப்பிரச்சனை தலித்துகளிடமும், தலித் அல்லாத இதர ஜனநாயகப் பிரிவினரிடமும் சர்ச்சையையும், பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இதற்காக நடைபெற்ற பேரணியில் கணிச மான அருந்ததியர் உள்பட 25,000 பேர் திரட்டப்பட்டது ஒரு வர லாற்று நிகழ்வாகும். இப்பேரணியும் இக்கோரிக்கைக்காக நடத்தப்பட்ட இதர தொடர் போராட்டங்களும் தமிழக அரசை நிர்ப்பந்தித்தது. இப்போராட்டங்களுக்குப் பிறகு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் முன்முயற்சியால் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதன் விவா தத்திற்குப் பிறகு தமிழக அரசு நீதிபதி ஜனார்த்தனம் தலை மையில் ஒரு குழு அமைத்தது. இக்குழு ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் பல விசாரணைகள் நடத்தியும், விபரங்கள் சேகரித்தும் இறுதியாக ஒரு அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்தது. தமிழக அரசு இதன் விபரங்களையும், சிபாரிசு களையும் ஏற்று தலித்துகளுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் பொது இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 3 சதம் அருந்ததியர் மக்களுக்கு வழங்கி ஆணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த ஆணையும் தலித் மக்களிடையேயும் இதர பகுதி மக்க ளிடையேயும் கூட விவாதங்களை ஏற்படுத்தியது. இருப்பி னும் பரவலான ஜனநாயகப் பிரிவினரிடம் இப்பிரச்சனைக்கு கிடைத்த ஆதரவால் இந்த உள்ஒதுக்கீடு வெற்றிகரமாக இன்றளவும் அமல்படுத்தப்படுகிறது.
இந்த உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஒரு சிலர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கிலும் சிபிஐ (எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து உள் ஒதுக் கீட்டை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அருந்த தியர் உள்ஒதுக்கீட்டில் கிடைத்த வெற்றி ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காக சிபிஐ(எம்) - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இப்பிரச்சனைக்காக சிபிஐ (எம்) தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய இயக்கங்களில் அருந்ததியர் மக்களும், அருந்ததி யர் அமைப்புகளும் பரவலாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க மற்றும் பெருமைக்குரிய அம்சமாகும்.
பி.சீனிவாசராவ் நினைவு தினம்
தோழர் பி. சீனிவாசராவ் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடித் தலைவர்களில் ஒருவர். முந்தைய கீழத்தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான உரிமைப் போராட்டங்களில் தலைமைப் பொறுப்பேற்று பெரும் பங்காற்றியவர். கூடவே தீண்டாமை மற்றும் வன்கொடுமை களுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தவர். இத னால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒப் பந்தங்கள் மட்டுமல்ல, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டும் பல ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டன. இவை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட் டத்துடன் இணைந்து நடத்துவது என்ற கம்யூனிஸ்ட் இயக்க பாரம்பரியத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
ஆலய நுழைவுப் போராட்டம்
ஒவ்வொரு ஆண்டும் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30-ஐ சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் நாளாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயல் படுத்தி வருகிறது. அன்றைய நாளில் தீண்டாமைக் கொடுமை களுக்கு எதிராக நேரடிப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்தும் போது ஆலய வழிபாட்டில் தலித்துகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. ஆலயங்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப் படுகின்ற இடங்களையும், ஆலய வழிபாட்டில் தலித்துகளுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்ற இடங்களையும் தேர்வு செய்து ஆலய நுழைவு மற்றும் தலித் உரிமைகளை நிலைநாட்டு கின்ற பல போராட்டங்கள் இக்காலத்தில் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் 29 ஆலயங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடத்தப்பட்டு அவை அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு மேல் பல ஆலயங்களில் தலித்துகள் பால் காட்டப்பட்ட பாரபட்சங்களை எதிர்த்தும் போராடி வெற்றி கள் பெறப்பட்டுள்ளன.
இப்போராட்டங்களின் போது சாதிய சக்திகளின் வன்முறை வெறியாட்டங்களையும், சில இடங்களில் காவல்துறையின் தடியடித் தாக்குதலையும் கூட எதிர்கொள்ள வேண்டியி ருந்தது. அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பலரின் சாதிய அணுகு முறைகளும் பல இடங்களில் தடைகளாக இருந்தன. இத்த கைய அடக்குமுறைகள், தடைகள் தகர்க்கப்பட்டுதான் தலித்து கள் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. இப்போராட்ட வெற்றி கள் ஏற்படுத்திய பரவலான தாக்கமும், தலித் மக்கள் மத்தியில் உருவான பெரும் வரவேற்பையும் இடதுசாரி இயக்கத்திற்கு கிடைத்த மரியாதையையும் எடுத்துக்கூற வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. இதில் உணர்வுகளின் பங்கு மகத்தானது.
நிலப் போராட்டம்
சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் நில உரி மைக்கு முக்கியப் பங்கு உண்டு. தலித்துகளுக்கு நிலம் வழங்குவது அவர்கள் அன்றாட வாழ்விற்கு சாதிய சக்திகளை சார்ந்திருப்பது குறைந்து அதன் மூலம் தங்கள் உரிமைக ளை நிலைநாட்ட பெரிதும் உதவுகிறது. கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரிகளின் தொடர்ச்சியான ஆட்சியின் போது கணிசமான தலித்துக ளுக்கும், பழங்குடி மக்களுக்கும் நிலம் வழங்கப்பட்டதன் கார ணமாக இம்மக்களின் வாழ்வாதாரம் பலப்படுத்தப்பட்டு தங்க ளின் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டார்கள். இதர மாநி லங்களை காட்டிலும் இம்மாநிலங்களில் தீண்டாமை வன்கொ டுமை மிக குறைவு என்பதற்கான காரணம் அவர்களில் கணிசமானவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதேயாகும். இப்பார்வையில் தான் கடும் நிர்ப்பந்தங்களின் காரண மாக வெள்ளையர்கள் காலத்தில் தலித்துகளுக்கு ‘பஞ்சமி நிலம்’ வழங்கப்பட்டது. தேச விடுதலைக்குப் பிறகும் ஜனநாயக சக்திகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் காரணமாக தலித்துகளுக்கு பல இடங்களில் ஓரளவு நிலம் வழங்கப்பட்டன. ஆனால் தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை இடதுசாரிகள் பலம் இல்லாத மாநிலங்களில் சாதி ஆதிக்க சக்திகளும், பல தனிநபர்களும் பல வழிமுறை களைக் கையாண்டு ஆக்கிரமித்துக் கொண்டனர். இதற்கு பல இடங்களில் அரசு அதிகாரிகளும் துணை போயுள்ளனர்.
பஞ்சமி நிலமீட்பு மாநாடுகள்
தமிழகத்தில் இத்தகைய நிலங்களை மீட்டு தலித்துக ளிடம் வழங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலும், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலும் பஞ்சமி நில மீட்பு மாநாடுகள் நடைபெற்றன. சில இடங்களில் தலித்துகளின் நிலம் மீட்டும் தரப்பட்டுள்ளது. எனினும் கணிச மான தலித் மக்களின் நிலம் இன்றளவும் சாதி ஆதிக்க சக்திகள் - தனி நபர்கள் கையில் உள்ளன என்பதே உண்மை. எதிர்காலத்தில் இதற்கான முயற்சிகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி பலப்படுத்திடும்.
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக
தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81 சாதி ஆணவப்படு கொலைகள் நடந்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட பலரும்கொ டூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் தலித்துகளின் எண்ணிக்கை அதிக மானதாகும். பல பெண்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலுவான தலை யீடுகளையும், போராட்டங்களையும் நடத்தி வருகிறது. சமீப சில ஆண்டுகளில் சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெற்ற அனைத்து சம்பவங்களிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்கிட தொடர்ந்து போராடி வந்துள்ளது என்றால் அது மிகையானதல்ல. சாதி ஆண வப் படுகொலை சம்பவங்கள் குறித்து அறிந்த சில மணி நேரங்க ளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர்கள் பாதிக்கப் பட்ட குடும்பங்களிடையே இருப்பதை அநேகமாக உறுதிப் படுத்தியுள்ளோம். இவை குறித்த நீதிமன்ற வழக்குகள் தொடர் கண்காணிப்புகளையும், உதவிகளையும் கூட தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்து வருகிறது. சாதி ஆணவப் படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டுள்ளனர் - பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிவாரணம் பெற்றுள்ளன என்ற நிகழ்வுகளுக்குப் பின்னால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வலுவான செயல்பாடு இருப்பதை எவரும் மறுக்க முடியாது.
நெடும்பயணம்
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சேலம் முதல் சென்னை வரை (450 கி.மீ.) தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய நெடும் பயணம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 15 நாட் கள் நடைபெற்ற இந்த நெடும் பயணத்தில் வழியெங்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், பல நகரங்களிலும் தலித் மற்றும் தலித் அல்லாதவர்களும் தனி நபர்களும் முற் போக்கு இயக்கங்களும் வரவேற்பு அளித்தனர். வழி யெங்கும் லட்சக்கணக்கான மக்களின் மனசாட்சியை தட்டி யெழுப்பும் நடைபயண இயக்கமாக இது அமைந்தது. இறுதி யாக சென்னை மாநகரில் உள்ளே நுழைந்து பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் நடைபயணம் செய்த நூற் றுக்கணக்கான தோழர்கள் மறியல் செய்து கைதாகினர்.
டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம்
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக “டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம்” துவக்கப்பட்டு 18 மாவட் டங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகா மில் பயிற்சி பெற்றவர்களில் 2 ஆயிரம் பேர் வரை தமிழ் நாடு அரசு, வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெருமையை இளை ஞர்கள் மத்தியில் பறைசாற்றும் அமைப்புகளில் அம்பேத் கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் பங்கு முக்கிய மானதாகும். இந்த பயிற்சி மையங்களில் செயல்படும் பல ஆசிரியர்கள் ஊதியம் எதுவுமின்றி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதர இயக்கங்கள்
ஆலய நுழைவு மறுப்பு மட்டுமல்ல, தீண்டாமையின் இதர வடிவங்களான தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை, பொதுவெளியில் நடந்து செல்ல மறுப்பு, சைக்கிளில் செல்ல அனுமதி மறுப்பு, காலணி அணியத்தடை, சலூன்களில் முடி வெட்ட அனுமதி மறுப்பு, பொதுமயான அனுமதி மறுப்பு, மயான உரிமை மறுப்பு, பொதுவழியில் சடலம் கொண்டு செல்ல அனுமதிக்காமை என ஏராளமான கொடுமைகளை பல்லாயிரம் கிராமங்களில் தலித்துகள் அனுபவித்து வரு கிறார்கள். இதற்கு எதிராகவும், இந்த உரிமைகளை நிலை நாட்டவும் பல கிராமங்களில் நேரடிப்போராட்டங்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் நடத்தப்பட்டு, அவை அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. எனினும் இக்கொடுமை களை முழுமையாக ஒழிக்க நீண்ட, நெடிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்பதே உண்மை.
தலித், பழங்குடி மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசு திட்டங்களில் நிதிஒதுக்கீடு, அதை அம்மக்களின் முன்னேற்றத்திற்காக முழுமையாக செலவிட வழிவகுக்கும் உப திட்டங்களை முழுமையாக அமல்படுத்திட கருத்தரங்கு கள், சிறப்பு மாநாடுகள் உட்பட பல இயக்கங்கள் இக்கா லத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் நடத்தப் பட்டுள்ளன. வேறு பல ஜனநாயக இயக்கங்களும் இக்கா லத்தில் பல்வேறு முயற்சிகள் - இயக்கங்கள் மூலம் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தன. இதனால் மாநில அரசு தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப உபதிட்ட நிதி ஒதுக்கியது. ஆயினும் அதை தலித் மக்களுக்கு முறையாக செலவிடுவதில் குறைபாடுகள் நீடித்து அதற்கு எதிரான குரலும் வெளிப்படுத்தப்பட்டது. தமிழக அரசு மற்றும் சில வங்கி நிறுவனங்களில் தலித் இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாத நிலையில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீட்டால் அவை சரி செய்யப்பட்ட நிகழ்வுகள் இக்காலத்தில் நடைபெற்றன.
சிறப்பு அம்சங்கள்
தலித் மக்கள் மீதான கொடுமைகள், வன்கொமைகளு க்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், இம்மக்களுக்கான சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய எண்ணற்ற போராட்டங்களில் தலித் மக்கள் மட்டுமல்ல, தலித் அல்லாத மக்களும் உணர்வுப்பூர்வமாக திரட்டப்பட்டார்கள் என்பது இப்போராட்டத்தின் சிறப்பு அம்சமாகும். உதாரணமாக உத்தப் புரம் தீண்டாமைச் சுவர் உடைக்கக்கோரி பேரையூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 3000 பேர் கலந்து கொண்டனர் என்றால் அதில் சரிபாதிப்பேர் தலித் அல்லாத மக்களாவர். இப்போராட்டம் பற்றி பிரபல தலித் அமைப்பின் தலைவர் குறிப்பிட்டதாவது “நாங்கள் (தலித் அமைப்பினர்) இப்போராட்டத்தை கையில் எடுத்திருந்தால் அதனை சாதிப் போராட்டமாகவே பார்த்திருப்பார்கள். ஆனால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதனை முன்எடுத்து நடத்தி யதால் இப்போராட்டத்திற்கு ஒரு ஜனநாயக வடிவமும், வரவேற் பும் கிடைத்துள்ளது.”
வரவேற்பும் பாராட்டும்
கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலித் மக்களின் மேம்பாட்டிற்காக நடத்திய எண் ணற்ற போராட்டங்களும் இயக்கங்களும் ஜனநாயக இயக் கங்கள் - பத்திரிகைகள் - தலித் அமைப்புகள் மற்றும் அறிவு ஜீவிகளால் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்.
- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உறுதியாகப் போராடி வரும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு அருந்ததியர் உள்ஒதுக்கீடு உரிமையைக் கோரிக்கையாக முன்வைத்து பெற்றமைக்காக அந்த அமைப்பு வருடம்தோறும் வழங்கி வரும் மிக உயரிய விருதான ‘அம்பேத்கர் விருதை’ சிபிஐ(எம்) அன்றைய மாநிலச்செயலாளர் தோழர் என்.வரதராஜனுக்கு வழங்கியது.
- தமிழகத்தின் பிரபல வாராந்திர பத்திரிகையான ஆனந்த விகடன் உத்தபுரம் சுவர் உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பங்களிப்பை பாராட்டி அதன் அப்போதைய மாநிலத்தலைவரை (இக்கட்டுரையாளர்) அந்த ஆண்டின் தமிழகத்தின் முதன்மையான 10 பேரில் ஒருவராக (Top 10) தேர்வு செய்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் வழங்கி வரும் முக்கிய விருதை அந்த ஆண்டின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை க்கு வழங்கி, ரூ.1 லட்சம் பணமுடிப்பு நல்கியபோது அத்தொகை முழுவதையும் தலித் மக்களின் உரிமைகளுக்காக எண்ணற்ற ஜனநாயக போராட்டங்களை நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
- இவை போக பல பத்திரிகைகள், ஊடகங்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பங்களிப்பை பாராட்டி பல சிறப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
- நீதிமன்ற தீர்ப்புகள் சிலவற்றில் சாதி ஆணவப்படு கொலைகளுக்கு எதிராக தலையீடு உட்பட பல வன்கொடு மைகளுக்கு எதிரான அம்சங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பங்களிப்பு பற்றி குறிப்பிட்டு உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இக்காலத்தின் புதுக்கோட்டை(2010), விருதுநகர்(2015), தஞ்சாவூர்(2019) ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளில் பிரபல இடதுசாரி அரசியல் தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளின் தலைவர்கள், பிரபல அறிவுஜீவிகள், கலை ஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு பெருமை சேர்த்தனர். சாதி ஒடுக்குமுறைக்கு இரையாகி இன்னல்களை உறுதியுடன் எதிர்கொண்ட எண்ணற்ற சாதி மறுப்பாளர்கள் இம்மாநாடுகளில் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்ததோடு தங்களுக்கு துணை நின்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு பாராட்டுதலை வெளிப்படுத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 3 மாநாடுகளின் பேரணிகளிலும் தலித் மற்றும் தலித் அல்லாத பல்லாயிரம் மக்கள் பங்கேற்று தங்கள் சாதி மறுப்பு மற்றும் இடதுசாரி இயக்க ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தினர்.
கட்டுரையாளர் : சிறப்புத் தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஆங்கிலம்), நாள்: 15.11.2019