புதுதில்லி, ஜூலை 3- ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ‘பசுப் பாதுகாப்புக் குழு’ என்ற பெயரில் இயங்கும் கும்பல் குண்டர்களால், பாஜக ஆட்சியின் போது கொல்லப்பட்ட பால் வியாபாரி பெஹ்லுகான் மீதும் அவரது மகன்கள் மீதும், இப்போதைய காங்கிரஸ் அரசு பசுக்களைக் கடத்தியதாகக் குற்ற அறிக்கை தாக்கல் செய்திருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்து டன் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதன் தலைவர் ராகுல் காந்தி கூறிட வேண்டும் என்றும் பெஹ்லுகான் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2017 ஏப்ரலில் பாஜக மாநில அரசு ஆட்சி செய்த காலத்தில் ‘பசுப் பாது காப்புக் குழு’ என்ற பெயரில் கும்பல் குண்டர்களால் பால் வியாபாரம் செய்து வந்த பெஹ்லுகான் பசு மாட்டைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார். இப்போது ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் தலை மையிலான மாநில அரசின் முதல்வர் அசோக் கெலாட் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை, இறந்த பெஹ்லு கான் மீதும், அவரது மகன்கள்மீதும் மேற்படி வழக்கில் பசுக்களைக் கடத்தியதாகக் குற்ற அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. பெஹ்லுகான், ஆர்எஸ்எஸ்/பாஜக ஆதரவுடன் இயங்கும் பசுப் பாது காப்புக் குழு என்னும் குண்டர் கும்பலால் கொல்லப்பட்டார். அவர் இறக்கும் சமயத்தில் அளித்த மரண வாக்கு மூலத்தில் குண்டர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும், முந்தைய வசுந்தரா ராஜே அரசாங்கம் அவர்களை சுதந்திரமாகத் திரிய அனுமதித்தது. இறந்தவரின் குடும்பத்திற்கும் எவ்வித மான இழப்பீடும் பாஜக மாநில அரசு அளித்திடவில்லை. அகில இந்திய விவ சாயிகள் சங்கம்தான் இதர முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து சுமார் பத்து லட்சம் ரூபாய் திரட்டி, இழப்பீடாக பெஹ்லுகான் குடும்பத்திற்கு அளித்தது.
பழிவாங்கும் விதத்தில் பாஜக அரசு வழக்கு
ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்த கால்நடைக் கண்காட்சியிலிருந்து பசு மற்றும் கன்றுகுட்டிகளை பெஹ்லுகான் வாங்கி வந்தார் என்பதற்கு தேவை யான ஆவணங்கள் அவரிடம் இருந்தது மிகவும் தெளிவான ஒன்று. ஆயினும் பெஹ்லுகான் முஸ்லிம் என்பதால் பாஜக அரசாங்கத்தின் கீழ் இயங்கிய காவல்துறை அவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் விதத்திலேயே இவ்வழக்கை நடத்தியது. இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் காலங்காலமாக தங்கள் ஜீவனத்திற்கு கால்நடைகள் வளர்ப்புத் தொழிலையே செய்து வரு கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அர சாங்கமானது இவ்வழக்கை மறுபடி யும் புலனாய்வுக்கு உட்படுத்தி, கும்பல் குண்டர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அவ்வாறு செய்வதற்குப் பதி லாக, பெஹ்லுகான் குடும்பத்தினரை மேலும் கடுமையான முறையில் பழி வாங்கும் விதத்தில் நடந்துகொண்டி ருக்கிறது. இதனை ஏற்க முடியாது. இது நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜன நாயக பாரம்பரியத்திற்கு முற்றிலும் விரோதமான செயலாகும். நரேந்திரமோடி மீண்டும் பிரதமரா கப் பதவியேற்றபின்பு, கும்பல் குண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் கொலைபாதகச் செயல்களில் ஈடுபடு வது நாட்டின் பலபகுதிகளிலும் அதிக ரித்திருக்கிறது. ஜார்க்கண்டில் ஒரு முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டி ருக்கிறார். இத்தகைய தேச விரோதக் கிரிமினல்களுக்கு எதிராகக் கடுமை யான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக காங்கிரஸ் மாநில அரசும் அத்தகைய கிரிமினல்களை முகத்துதி செய்யும் விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பசுவின் பெயரால் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வெறுப்பு அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அதன் தலைவர் ராகுல் காந்தி தெளிவு படுத்திட வேண்டும்.
மீண்டும் விசாரணை நடத்துக
அசோக் கெலாட் அரசாங்கம், பெஹ்லுகான் கொலை வழக்கை மீண்டும் புலனாய்வுக்கு உட்படுத்தி, உண்மையான குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்திட வேண்டும். வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகச் செய்தியைக் கொண்டுசெல்லும் விதத்தில், இறந்த பெஹ்லுகான் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். இது தொடர்பாக அகில இந்திய விவ சாயிகள் சங்கம் ஒரு கோரிக்கை மனுவை ராஜஸ்தான் மாநில முதல்வரிடம் சமர்ப்பித்திடும். ராஜஸ்தான் மாநில அரசு பெஹ்லு கான் மகன்கள் மீது போட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறாவிட்டால், அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிட மறுத்தால், அகில இந்திய விவசாயிகள் சங்கம், இதர விவசாய சங்கங்களோடு இணைந்து இதற்கான போராட்டங்களில் தீவிரமாக இறங்கிடும். இவ்வாறு அசோக் தாவ்லே, ஹன்னன்முல்லா ஆகியோர் கூறி யுள்ளார்கள். (ந.நி.)