tamilnadu

img

4 ஹாக்கி வீரர்கள் விபத்தில் பலி

போபால், அக். 14- மத்தியப் பிரதேசத்தில் கார் விபத்தில் ஹாக்கி வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்கா பாத் மாவட்டத்திற்கு அருகே ரைசால்பூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்து கொண்டிருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காய மடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலி யான நான்கு பேரும் தேசிய அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரர்கள் என்பது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் நடைபெறும் ‘தியான் சந்திரா கோப்பை’ ஹாக்கி போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிரு ந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கார்  கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  விபத்தில் பலியான நான்கு பேரும் 18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.