tamilnadu

img

பேராவூரணி பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாள் விழா

தஞ்சாவூர், அக்.15- பேராவூரணி டாக்டர் ஜே.சி.கும ரப்பா பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாள் இளை ஞர் எழுச்சி நாள் விழாவாக நடை பெற்றது. தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலா ளர் டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சுரேஷ் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.  பள்ளி மாணவர்களுக்கு விளை யாட்டு போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, கருத்தரங்கம் ஆகியவை நடத் தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் பேராவூரணி காவல் நிலை யத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் பள்ளி அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், பிரியதர்ஷினி, அஸ்வின்ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் இலக்கிய சீலன், லேகா, ரமாதேவி, மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செங்கமங்கலம்- அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் இளைஞர் எழுச்சி நாள் விழா பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் வி.ஏ.டி. சாமியப்பன் தலைமையில் நடை பெற்றது. இதையொட்டி பள்ளி வளா கத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சரோஜா, நிர்வாக அலுவலர் பிலவேந்திர ராஜ், அறங்காவலர்கள், ஆசிரியர்கள் பெற் றோர்கள் மற்றும் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.  பேராவூரணியை அடுத்த வீரி யங்கோட்டை அட்லாண்டிக் சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளி சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி, பேராவூரணி வட் டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பெரிய குளம் ஏரி வரை ஊர்வலமாகச் சென்று, ஏரிக்கரையில் புங்கை, இலுப்பை, அத்தி, வாகை, நாவல், செஞ்சந்தனம், வில்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் எஸ். சீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் எஸ்.ஜனனி, காவல்உதவி ஆய்வாளர் இல.அருள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) செய லாளர் பிரபாகரன், பொருளாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் திருவேங்கடம், துணைத் தலைவர் நிமல் ராகவன், பள்ளி ஆசிரியர்கள் கவி சேகரன், உமா, ரெமோ, பெரோஷ், பிரி யங்கா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.