tamilnadu

தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

ஒரத்தநாடு மருத்துவமனையில் காசநோய் கண்டறிதல் முகாம்
தஞ்சாவூர், டிச.11- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு மருத்துவமனை யில் துரித காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் தலைமை வகித்தார். மேலும் காசநோய் சிறப்பு மருத்துவர் முகமது கலீல் முன்னிலை வகித்தார். தலைமை மருத்து வர் வெற்றிவேந்தன் காசநோய் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகள் சிகிச்சை முறைகள் மற்றும் நோய் ஆபத்து குறித்து விளக்கங்கள் எடுத்துரைத்தார்.  முகாமின் ஒரு பகுதியாக இலவச நடமாடும் நுண்கதிர் (எக்ஸ் ரே) பரிசோதனையை வாகனத்தின் மூலம் காசநோய் அறிகுறிகளுக்கான, நாட்பட்ட இருமல், சளி, விட்டு விட்டு காய்ச்சல், பசியின்மை, எடைக் குறைவு உள்ளிட்ட நோய் களுக்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு சளி, சர்க்கரை நோய், எச்ஐவி முதலிய பரி சோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. முகாமில் 75 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 5 நபர்களுக்கு புதிதாக காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் துரித காசநோய் முகாமின் நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்தை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன், காச நோய் சிறப்பு மருத்துவர் முகமது கலீல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

‘பாபுஜி நீங்கள் அழியாதவர்’ கடிதம் எழுதுதல் போட்டி
மன்னார்குடி, டிச.11- மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியின் 150 மாண வர்கள் ‘பாபுஜி நீங்கள் அழியாதவர்’ என்னும் தலைப்பில் மகாத்மா காந்திக்கு கடிதங்களை எழுதினர். இந்திய அஞ்சல் துறை சார்பாக மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் விழா வினை முன்னிட்டு கடிதம் எழுதுதல் போட்டி. 8 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளில் தேசிய அளவில் நடத்தப்படுகிறது.  தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளில் காந்திஜிக்கு எழுதப்பட்ட கடிதங்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சென்னை மண்டல தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு அனுப்பப்பட வேண்டும். மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டிக்கு பள்ளி யின் தலைமையாசிரியர் த.லெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் எம்.திலகர், ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் எஸ்.ராஜமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் எஸ்.அன்பரசு வரவேற்றார். மன்னார் குடி தலைமை தபால் நிலைய முன்னாள் கண்காணிப்பாளர் செ.குப்புசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் இந்திய அஞ்சல் துறை நடத்தும் இப்போட்டியின் மூலம் மாண வர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வு களைப் பற்றியும் சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழாசி ரியர் டி.செல்வராஜ் நன்றி கூறினார்.