tamilnadu

தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
 தஞ்சாவூர், அக்.16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த திருச் சிற்றம்பலத்தை சேர்ந்தவர் தங்கம். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனத் தொழில் செய்து வருகிறார். திங்கள்கிழமை அதிகாலை, வீட்டில் இருந்து புறப்பட்டு, ஆவணம் வரை நடைபயிற்சி சென்று விட்டு, வீடு திரும்பிய போது, மழை பெய்ததால், புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறி திருச்சிற்றம்பலத்திற்கு வந்துள்ளார்.  தனது வீட்டருகில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். நேரமாகி விட்டதாகக் கூறி, புது‌க்கோ‌ட்டை, காந்தி நகரைச் சேர்ந்த ஓட்டுநர் போத்தி (40), வழக்க மான நிறுத்தத்தில், பயணிகளை இறக்கி விட பேருந்தை நிறுத்தியுள்ளார். தனது வீட்டு அருகே பேருந்தை நிறுத்தாத தால், ஆத்திரமடைந்த தங்கம், ஓட்டுநர் போத்தியை, பேருந்தில் கிடந்த இரும்புக் கம்பியால், சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதில் போத்தியின் வலது கை உடைந்தது. இந்த சம்பவத்தால் கடைவீதியில் மக்கள் கூட்டம் கூடவே அங்கிருந்து தங்கம் தலைமறைவாகி விட்டார். கை உடைந்த போத்தி திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை யினர் தங்கத்தை தேடி வருகின்றனர்.  ஓட்டுநர் போத்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த நிலை யில் ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சென்ற தால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

சாலை விபத்தில் 13 பேர் படுகாயம்
அறந்தாங்கி, அக்.16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லனேந்தல் அருகே டாட்டா ஏஸ் மற்றும் பொலிரோ பிக்கப் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ள னர். கோட்டைப்பட்டினத்தில் செவ்வாயன்று நடைபெற்ற கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொண்டு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் டாட்டா ஏஸ் வாகனத்தில் காரைக்குடியிலுள்ள தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அறந்தாங்கி மீமிசல் சாலை யிலுள்ள கல்லனேந்தல் அருகே டாட்டா வாகனம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பொலிரோ பிக்கப் வாகனம் வேகமாக மோதியது.  இதில் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்ற 13 பேரும் வண்டி யோடு தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த பிரான்மலை, முகமதுஅப்பாஸ், சபீனாபேகம், ஆயிஷாபேகம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வாடகை தராத கடைகளுக்கு சீல்
அறந்தாங்கி, அக்.16- அறந்தாங்கி நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் குட்டைக்குளம் கீழ்க்கரையில் உள்ள கோவிலுக்கு சொந்த மான இடம் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக கடைகள் கட்டி பயன்படுத்தி வந்த தனியார் நபர்கள் வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர். கோவில் நிர்வாகம் பலமுறை வாடகை கேட்டும் தரப்படாத தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அக்கடைகளை பூட்டி சீல் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் பாலசுப்ரமணியன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். காவல்துறை ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர் ராமன், கிராம நிர்வாக அலுவலர் மோகன், நில அளவையாளர் சுப்பிரமணியன், அறநிலை யத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆவுடையார்கோவிலில் கலை இரவு
அறந்தாங்கி, அக்.16- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் ஆவுடையார்கோவில் கிளை சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் பிறந்தநாள் கலை நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. கிளைத் தலைவர் எஸ்.சோனமுத்து தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் டாக்டர் என்.பழனிவேல் ராஜன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் ஏ.கலந்தர் முகைதீன் வரவேற்றார். தமுஎகச கவிஞர் எஸ்.கவி பாலா வாழ்த்தி பேசினார்.  மக்கள் கலைஞர் பொன்னமராவதி சடையாண்டி குழுவினரின் பொய்க்கால் குதிரை ஆட்டம், வடநகர் சி.சுப்பிர மணியன் குழுவினரின் பல்குரல் பல்சுவை நிகழ்ச்சி, பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி, அரசு கல்லூரி மாணவி களின் கவிதை தொகுப்பு, ஆவுடையார்கோவில் தபேலா மாரிமுத்து குழுவினரின் மக்கள் இசைப்பாடல்கள், ராஜ்குமாரின் பொம்மை ஆட்டம், ஆலங்குடி. வெள்ளைச் சாமி குழுவினரின் பட்டிமன்றம், எம்.எஸ்.கலந்த நெருப்பு முருகேஷ் குழுவினரின் வீதிநாடகம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆர்.இளமாறன் நன்றி கூறினார்.

அக்.23 எரிவாயு குறைதீர் கூட்டம்
திருவாரூர், அக்.16- திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் மாவட்டத்தில் நுகர்வோருக்கு சேவை ஆற்றுவதற்கான ஆலோசனைகள் பற்றி விவாதிப்பது மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட உருளைகள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அதனைக் களைவது தொடர்பாக  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 23.10.2019 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் “எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திரக் கூட்டம்” திருவாரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, எரிவாயு வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் இக்கூட்டத்தில் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம். என ஆட்சியர் த.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.