தஞ்சாவூர்,டிச.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தில் அனுசரணை ஆராய்ச்சி திடல் நடவுப் பணியில் தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி மேற்பார்வையில், சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலர் ச.சங்கவி, உதவி வேளாண்மை அலுவலர் பாலசந்தர் ஆகியோர் கண்காணிப்பில், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ப.வெங்கடேசன், விஜய், வேலு, சி.ராஜேஷ்குமார், தாமு, கபிலன், சூரிய பிரகாஷ் ஆகி யோர் ராஜேஷ் என்பவரது வயலில் விவசாயத் தொழிலாளி லட்சுமி என்பவருடன் இணைந்து பயிற்சி பெற்றனர்.