tamilnadu

பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

தஞ்சாவூர், டிச.25- தஞ்சை மாவட்டம் பேரா வூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் தந்தை பெரி யார் நினைவு நாள் பொ துக்கூட்டம் செவ்வாய்க்கிழ மை நடைபெற்றது. பேரா வூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கூட்டத் திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமை ப்பாளர் சித.திருவேங்கடம் தலைமை வகித்தார்.  “பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்” என்ற தலைப்பில் தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன், தாளாண்மை உழவர் இயக் கத்தின் தலைவர் கோ. திரு நாவுக்கரசு, கல்வியாளர்கள் கே.வி. கிருஷ்ணன், புலவர் சு.போசு, தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனை வர் ஆ.ஜீவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ். வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சி சாதிக் அலி, திராவிடர் விடுதலைக் கழகம் கலைச் செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திராவிடர் கழகம், திராவி டர் விடுதலைக் கழகம், தமிழக மக்கள் புரட்சி கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, விதைநெல் இலக்கியக் கூடம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், அறநெறி மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தோழமை சமூக சேவை மையம் போன்ற அமைப்புக ளைச் சேர்ந்த ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

;