தஞ்சாவூர், செப்.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினர் இரா.புண்ணியமூர்த்தி இல்ல மண விழா ஞாயிற்றுக்கிழமை தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாராஜா திருமண மஹாலில் நடை பெற்றது. தஞ்சாவூர் இரா.புண்ணியமூர்த்தி- பி.மாலதி ஆகியோரது மகன் பாலாஜி என்ற பி.சரோஜ் பாரதிக்கும், ராஜாமடம் டி.ஆர்.துரைராஜ்- டி. ஆனந்தி ஆகியோரது மகள் டி.ரேஷ்மா வுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமையில் நடந்தது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பு கே.சுவாமிநாதன், முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் மற்றும் தலை வர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில் கட்சியினர், முன்னணி தொழிற்சங்க தோழர்கள், இன்சூ ரன்ஸ் அரங்க நிர்வாகிகள், முக்கிய பிர முகர்கள், அரசு அலுவலர்கள், பல் வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக சனிக்கிழமை மாலை வர வேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.