tamilnadu

img

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் நிலுவை இன்றி 100 சதம் வரி வசூல் செயல் அலுவலர் சிவலிங்கம் தகவல்

கும்பகோணம், மார்ச் 3-  தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வ ரம் பேரூராட்சியின் 2019-20 ஆம் ஆண்டிற்கான அனைத்து வரிகளும் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவ லிங்கம் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் பேரூ ராட்சியில் பொதுமக்களிடம் இருந்து சொத்துவரி  கேட்பு தொகை ரூ. 33,61,023/-மற்றும் திடக்கழிவு மேலாண் மை சேவை கட்டணம் ரூ. 7,44,600/-ஆக கூடுதல் தொகை ரூபாய் 41,05,623/- முழுவதும் 28/2/2020. தேதியில் 100 சதவீதம் நிலுவை இன்றி வசூலிக்கப் பட்டது. திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பல  ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதம் 31 ஆம் தேதியேசொத்துவரி மற்றும் குடிநீர் கட்டண கேட்பு தொகை நிலுவை இன்றி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு பேரூ ராட்சிகளின் இயக்குநர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர், ஆய்வு கூட்ட அறிவுரைகளின் படி ஜனவரி 31 ஆம் தேதி குடிநீர் கட்ட ணத்தை நிலுவை இன்றி வசூலிக்கவும் சொத்து வரியினை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் 100 சதவீதம் நிலுவை யின்றி வசூலிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்து வகுக்கப்பட்ட செயல் திட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் 100 சதவீதம் வசூல் இலக்கு எட்டப்பட்டது. 100 சதவீத வரிவசூல் பணிக்கு திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் உதவி யாக இருந்த  இளநிலை உதவியாளர் தயாள ராஜகோபாலன் ,பம்ப் மெக்கானிக் முருகன் ,வரித்தண்டலர் அறிவுக்கடல், அலுவலக உதவியாளர் சின்னதுரை, மின் பணியாளர் செந்தில்குமார், குடிநீர் திட்ட பணி யாளர் ரமணி, கணினி இயக்குபவர் தமிழ் காவலன், திவ்யா, பரப்புரையா ளர்கள் கலைவாணி, ரஞ்சிதா, செல்வி.புவனேஸ்வரி, துப்புரவு மேற் பார்வையாளர் பரசுராமன் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்கள் பணி பாராட்டுக்குரியது.  மேலும், குறிப்பாக எங்களது வேண்டுகோளை ஏற்று உரிய காலத் திற்குள் வரி இனங்கள் மற்றும் கட்ட ணங்கள் அனைத்தையும் நிலுவை யின்றி செலுத்தி பேரூராட்சியின்  நலத் திட்டங்களுக்கு உதவி ஒத்துழைப்பு நல்கிய திருநாகேஸ்வரம் பேரூராட்சி பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி யினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.