தஞ்சாவூர், செப்.25- தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாறு கோட்டத்தில் ரூ.2 கோடியே 22 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என பொதுப் பணித் துறையின் வெண்ணாறு கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆர்.இளங்கோ தெரிவித்தார். தஞ்சாவூரில் செவ்வாயன்று செய்தியாளர்கள் சுற்றுப்பய ணத்தின் போது அவர் மேலும் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கம்பர்நத்தம் கிராமத்தில் வடவாற்றி லிருந்து பிரியும் மேட்டுவாய்க்கால் தலைப்பு சிதிலமடைந்து இருந்ததால், குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் மதகு, தடுப்பு சுவர் சீரமைக்கப்பட்டும், இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் தூர் வாரப்பட்டுள்ளது. மேலும், வடவாற்றிலிருந்து கம்பர்நத்தம் கிராமத்தில் பிரிந்து செல்லும் செட்டிசத்திரம் வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் பணி திட்டத்தின் கீழ் வாய்க்கால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வா ரப்பட்டு தற்போது பாசனத்துக்கு தண்ணீர் சீராக சென்று வரு கிறது. அதே போல், சிக்கப்பட்டு கிராமத்தில் புத்தூர் வாய்க்கால் ரூ.11 லட்சத்தில் குடிமராமத்து பணியில் சீரமைக்கப் பட்டுள்ளது. இதனால் சிக்கப்பட்டு, முன்னாவல்கோட்டை, காளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1,245 ஏக்கரில் சாகுபடி செய்ய தண்ணீர் எளிதாக செல்கிறது. மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனந்தகாவேரி வாய்க் கால், பிள்ளைவாய்க்கால், வெட்டுவாய்க்கால், மகாதேவ புரம் வாய்க்கால் மற்றும் பல்வேறு இடங்களில் வாய்க்கால் மதகுகள் சீரமைப்பு, தடுப்பு சுவர் கட்டுதல் என 15 பணிகள் ரூ.2 கோடியே 22 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு இப்பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார்.