tamilnadu

img

செருவாவிடுதியில்  குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை (NSV) முகாம் நடைபெற்றது.அறுவை சிகிச்சையை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தரராஜன் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.முருகேசன் நடத்தினார். இதில் 5 ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னதாக வாசக்டமி அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.  முகாமில், மருத்துவ அலுவலர் கே.வெங்கடேஷ், தஞ்சாவூர் மாவட்ட தொழில் நுட்ப உதவியாளர் கே.விஸ்வநாதன், தஞ்சாவூர் மாவட்ட இயக்ககம் மாவட்ட புள்ளியியலாளர் ஏ.குமரேசன், வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் எஸ்.அசோகன், பி.சுகுமார், எஸ்.இராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள்ஆர்.தவமணி, எம்.கருப்பசாமி, டி.புண்ணியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன் செய்திருந்தார்.