tamilnadu

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்- இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

இளம்பிள்ளை, அக்.30-  இடங்கணச்சாலை அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம்,  இடங்கணங்சாலை கிராமம் தூதனூர் பகுதியைச் சேர்ந்த தன பால் மகன் மணி (20). இவர் கட்டிட கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், புதனன்று கே.கே.நகர் வண் ணான் கரடு பகுதியில் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துன்பு றுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக் கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரி வித்த நிலையில், அதிர்ச்சியடைந்த பெற் றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த மகு டஞ்சாவடி காவல்துறையினர் மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.