tamilnadu

img

சேலத்தில் பெண் துணை ஆட்சியரை மிரட்டு வருவாய் ஆய்வாளர்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பெண் அதிகாரியை தொலைபேசியில் வருவாய்த்துறை ஆய்வாளர் மிரட்டியதாக சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆடியோவில் கடுமையாக மிரட்டுகிறார் வருவாய்த்துறை ஆய்வாளர்.

மாவட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் அர்த்தநாரி. அதிகாரிகளுடன் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில்  ஆதி திராவிடர் நலத்துறையின் பணியாற்றும் இலக்கியா என்ற அலுவலர் அனுப்ப வேண்டிய செலவு பட்டியல்களை காலதாமதம் செய்ததாகவும் இதனால் இவரது உயர் அதிகாரிகள் சேலம் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி இலக்கியாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக அர்த்தநாரி, சாந்தியிடம் தொலைபேசியில் பேசுகையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை சங்கும் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், அந்த இலக்கியா பெண்ணிடம் என்னங்க பிரச்சி னை. அவுங்க என் தங்கை. கூப்பிட்டு பொறுமையா சொல்லுங்க. அநாவசியாமாகப் பேசுவதை நிறுத்திக்கோங்க. நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன். விளையாடுறீங்களா, நேரில் வந்தால் நாறிப்போயிடும். நீ அதிகாரியா, உனக்கு அறிவு இருக்கா, 
வந்தேன்னா ஆபீஸை இழுத்து மூடி சீல் வச்சிடுவேன். நானும் பார்த்துட்டு இருக்கேன். நீ ஓவரா போற, நீயும் ஒரு பொம்பள தானே,  நான் நேர்ல வந்தால் தாங்க மாட்ட என கடுமையாக வாக்குவாதம் நடக்கிறது.

இதனால், அர்த்தநாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. சாந்தியின் மீது தவறு இருந்தால், ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அர்த்தநாரி இவ்வாறு பேசுவது சரியானது இல்லை என எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், தவறுதான் என அர்த்தநாரி கூறியுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் இந்த பிரச்சனையால் பரபரப்பாக காணப்பட்டது.