சேலம், நவ. 24- சேலம் மாவட்ட வாள் சண்டை கழகம் சார்பில் ஞாயிறன்று மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி நடைபெற்றது. சேலம் டவுன் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் வாள் சண்டை போட்டி நடை பெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டி யானது எப்பி, சேபர், பாயில் ஆகிய மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் அனைத்து பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் வரும் நவ.30ஆம் தேதி மதுரையில் நடை பெறும் மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனர்.