tamilnadu

img

சென்னையிலுள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் இளைஞர் கொலை

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் விஜய்(25) என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்படுள்ளார்.

இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவர் மரணமடைந்தை அடுத்து விஜய் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், போதைக்கு அடிமையான விஜயின் மரணம் குறித்து விசாரித்துள்ளனர். 

இதுகுறித்து போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பதிவுகள் அழிக்கப்பட்டிருந்ததையடுத்து, போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் அஜய் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.