tamilnadu

img

எழுத்தாளர் இரா. சுப்பிரமணிக்கு கருத்துரிமைக்கான கைத்தடி ‘விருது’

சென்னை, டிச.25 - கருத்துரிமைக்கான கைத்தடி ‘விருது’ எழுத்தாளர் இரா. சுப்பிர மணிக்கு வழங்கப்பட்டது.

கவிஞர் வைகறைவாணன் 74வது  பிறந்தநாளை யொட்டி சென்னை யில்  நடைபெற்ற விழாவில் எழுத்தா ளர் இரா. சுப்பிரமணிக்கு ‘கருத்துரி மைக்கான கைத்தடி விருது’ வழங்கப்பட்டது.

இவர் எழுதிய ‘மெக்காலே - பழமைவாத கல்வியின் பகைவன்’ என்ற நூல் குறித்த கருத்தரங்கம் இதழாளர் மயிலை பாலு தலை மையில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் வ. கீதா, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

வைகறைவாணன் பிறந்தநாள் விழா மலர் வெளியீட்டு நிகழ்வில் முனைவர் கா.பஞ்சாங்கம், வழக்கறிஞர் அருள்மொழி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, நாடகவியலாளர் அ. மங்கை, ஆய்வாளர் இரா. வெங்கடாசலபதி, எழுத்தாளர்கள் பழ. அதியமான், செல்வ புவியரசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு நிறைவு உரையாற்றி னார்.